நமதூர் பெரிய கடைத்தெரு அஜ்மீர் ஸ்டோர் அருகில் பல ஆண்டுகாலமாக சலூன் கடை நடத்தி வருபவர் சபாபதி அவர்கள். இவர் நமதூரில் உள்ள பலருடனும் நட்புட் பாராட்டி பழகி வருபவர். நமதூர் சிறுவர் முதல் பெரியவர் வரை பலரும் இவருக்கு நண்பர்கள். இவர் நமதூர் கடைத் தெருவில் தனது 20ஆம் வயதில் தனது பணியை துவங்கினார். பின்னர் சில ஆண்டுகாலம் சவூதியில் பணி புரிய சென்று மீண்டும் தாயகம் திரும்பிய அவர் தனது சலூன் கடையை தொடர்ந்தார்.
இவருக்கு சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. இதனை அடுத்து இன்று அதிகாலை 5:00 மணியளவில் அதிரை பிள்ளைமாள் தெருவில் உள்ள தனது இல்லத்தில் மரணம் அடைந்தார். இவரது உடல் இன்று மாலை 3:00 மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது.
இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும், 4 சகோதரர்களும் உள்ளனர்.
தகவல்: முகம்மது ஹாலித்
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது