அதிரை மேலத்தெரு பகுதியின் நன்மைக்காக அமீரத்தில் நடைபெற்ற TIYAவின் பொதுக்குழு கூட்டம்

Editorial
0




அமீரக TIYA வின் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு தேரா பகுதியில் உள்ள சகோதரர் சேக்காதி அவர்கள் இல்லத்தில் அமீரக TIYA வின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் சகோதரர் S.M. அப்துல் முனாப் காக்கா அவர்களுடைய தலைமையில் மிக சிறப்பான முறையில் நடை பெற்றது இதில் ஏராளமான நமது மஹல்லா சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முதலாவதாக TIYAவின் பைலாவை பொருலாளர் S.M. அப்துல்காதர் TIYAவின்  பைலா முழுவதுமாக வாசிக்கப்பட்டது

பைலாவின் படி உறுப்பினர்கள் மாதந்தோறும் அமைப்பிற்கு சந்தாவை செலுத்த வேண்டும் தொடர்ந்து ஆறு மாத காலம் சந்தா செலுத்தாத உறுப்பினர்களுக்கு, பொதுக்குழுவில் கலந்து கொள்ள மட்டுமே உரிமையுள்ளது. வேறு எந்த உரிமையும் கிடையாது. தொடர்ந்து ஒரு ஆண்டு சந்தா செலுத்தாத உறுப்பினரின் பெயர் உறுப்பினர் பதிவேட்டிலிருந்து எவ்வித முன் அறிவிப்பு இன்றி நீக்கப்படும்.என்ற வாசகத்தில் ஒரு சிறிய மாற்றம் செய்வதென தீர்மானிக்கப்பட்டது ஆறு மாதம் என்பதை ஒருவருடமாகவும். ஒரு வருடம் என்பதை ஒன்றை வருடமாக மாற்றுவதென தீர்மானிக்கப்பட்டது.

கடந்த 2013ஆம் ஆண்டு இப்தார் கொடுத்தது போன்று இனி வரும் காலங்களில்
 இப்தார் நிகழ்ச்சியின் செலவினங்களை பொது வசூல் செய்யாமல் TIYAவின் இருப்பு தொகையில் எடுத்து செய்யவேண்டுமென்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அமீரகத்தில் உள்ள மஹல்லாவை சார்ந்த ஏழ்மையான சகோதரர்களுக்கு வட்டி இல்லா கடன் திட்டத்தை இந்த வருடம் முதல் செயல் திட்டத்திற்கு கொண்டுவருவதென தீர்மானிக்கப்பட்டது.

மேலத்தெரு மஹல்லா சகோதரர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று குர்ஆன் ஒதி கொடுக்கும் பள்ளியை இன்னும் இரண்டு இடங்களில் விரிவு படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

மேலத்தெரு மஹல்லாவில் உள்ள ( பெண்கள் ) குளம் குத்தகை விடுவது சம்மந்தமாக அதிரை TIYA தலைவர் எழுதிய கடிதம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது பெண்கள் குளம் குத்தகை விசையத்தில் தற்போது உள்ள சூல் நிலையில் TIYA குத்தகை எடுக்க சாத்தியம் இல்லை என்பதாள் தாஜுல் இஸ்லாம் சங்கம் தீர்மானத்தின் படியே விட்டுவிடுவதென பொது குழுவில் முடிவு செய்யப்பட்டது.

2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு வரவு செலவு கணக்குகள் பொருளாலர் S.M. அப்துல் காதர் அவர்களால் சமர்பிக்கப்பட்டது.
மேலும் உறுப்பினர்கள் முன்னிலையில் தேர்தல் குழு அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட சகோதரர் A. சிராஜுதீன் அவர்கள் முன்னிலையில் TIYA வின் கடந்த வருட நிர்வாகம் கலைக்கப்பட்டது 2014ஆம் ஆண்டுக்கான TIYA வின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து தருமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டது புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வது விசையமாக TIYA உறுப்பினர்களும் தேர்தல் குழு அதிகாரியும் ஆலோசித்து தற்பொழுது உள்ள நிர்வாகமே மேலும் ஒராண்டுக்கு தொடர்ந்து செயல் படவேண்டும் மென்று முடிவு செய்யபட்டு கூடுதலாக 5ந்து இணைசெயலாளர்கள் மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்.
  

அதன்படி கீழ்க்காணும் சகோதரர்கள் ஏகோபித்த ஆதரவு பெற்று ஒருமணதாக தேர்வு செய்தார்கள் அதன் விபரம் வருமாறு.
   

தலைவர்          :              K.M.N. முகமது மாலிக்

துணைதலைவர்    :            H, சபீர் அகமது

செயலாளர்         :           N.K.M.நூர் முகமது (நூவன்னா)

இணைசெயலாளர்கள் :       J. ஜவாஹீர், M. சபீர் அகமது , S. நிஜாமுதீன் , A. ரம்ஜான் அலி , S. ஹாஜி முகமது, M. சமீர் அகமது

பொருலாளர்                  :          S.M. அப்துல் காதர்,


மேற்கண்ட நிகழ்வுடன் அமீரக TIYAவின் பொதுக்குழு கூட்டம் துஆவுடன் இனிதே நிறைவுற்றது.
 



 



என்றும் அன்புடன்,
அமீரக TIYA நிர்வாகம்
துபை

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)