
அதிரையில் இன்று மாலை 6:00 மணியளவில் தஞ்சை தொகுதி தி.மு.க வேட்பாளர் திரு.டி.ஆர்.பாலு அவர்களை ஆதரித்து அதிரை மனித நேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் தேர்தல் பிரச்சார எழுச்சிக்கூட்டம் நமதூர் பேருந்து நிலையத்தில் நடைப்பெற்றது.
தஞ்சை மாவட்ட ம.ம.க தலைவர் தஞ்சை பாதுஷா அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சகோ. எஸ்.எஸ்.அஸ்லாம் பாட்ஷா அவர்கள் சிறப்புறையாற்றினார்கள், த.மு.மு.க வின் மாநில செயலாளர் கோவை செய்யது அவர்களும் கலந்துக்கொண்டு எழுச்சியுறையாற்றினார்கள். இதற்க்கு முன்னதாக தி.மு.க வின் அதிரை நகர செயலாளர் திரு.இராம.குணசேகரன் அவர்கள் வரவேற்ப்புரையாற்றினார்கள். அதிரை த.மு.மு.க வின் பொருளார் செய்யது முகம்மது புகாரி அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த புருசோத்தமன் வாக்குகள் சேகரித்து உரையாற்றினார்கள்.











1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது