பட்டுக்கோட்டை சிவக்கொல்லை பகுதியில் இருந்து அறந்தாங்கியில் உள்ள அழியாநிலை ஆஞ்சநேயர் கோவிலுக்கு 18 பேர் டூரிஸ்ட் வேனினை வாடகைக்கு எடுத்து சென்றுள்ளனர். இந்நிலையில் வேன் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆவனம் கலாம் பாலிடெக்னிக் அருகே வளைவில் சென்று வேகமாக திரும்பியபோது வேன் நிலை தடுமாறி பள்ளத்தில் கவழிந்தது பல முறை உருண்டு சாலையில் கிடந்தது. இந்த விபத்தில் வேனில் பயனம் செய்த அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. வேன் ஓட்டுனர் பிரபாகர் (42), கார்த்தி (26), ரமா (40) உள்பட அனைவருக்கும் பலத்த காயம், இதில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் சிலரை பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி மருத்தவ மனையில் சேர்த்து சிகிச்சையளித்து வருகின்றனர். ஆவணம் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது