இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு செல்போனில் இணைய தள வசதியை இலவசமாக வழங்க பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 500 கோடி வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்ப்பதற்காக, ‘இன்டர்நெட் டாட் ஓஆர்ஜி’ என்ற ஒரு அதிரடி திட்டத்தை பேஸ்புக் நிறுவனம் செயல்படுத்த தொடங்கியுள்ளது. அதன்படி, இந்த திட்டம் ஆப்பிரிக்க நாடுகளில் செயல்படுத்த தொடங்கிவிட்டது.
இந்த சேவையை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வசதியை தமிழகம், ஆந்திரா உள்பட 6 மாநிலங்களில் உள்ள ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் பெறமுடியும். முதல் கட்டமாக 33 இணைய தளங்களை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தவிர ஏர்டெல் மற்றும் வோடோபோன் வாடிக்கையாளர்க ளுக்கும் இந்த சேவையை வழங்குவதற்காக அந்த நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி:தினகரன்
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது