முத்துப்பேட்டை தர்கா கந்தூரி ஊர்வலத்தில் ரகளை செய்த வாலிபர்கள் கைது!

Unknown
0

முத்துப்பேட்டை தர்கா கந்தூரி ஊர்வலம் நேற்று முன்தினம் நடைப்பெற்றது. அப்போது ஊர்வலத்தில் சென்ற முத்துப்பேட்டையை சேர்ந்த அப்துல் முத்தலிப் மகன் வாசிம் கான் (22), சர்புதின் மகன் முகமது மாஜித்(19), பசீர் அகமது மகன் நசீர்(20), முகமது அலி மகன் ஜாபர் சாதிக்(20) ஆகியோர் கந்தூரி ஊர்வலம் ஜம்புவானோடை சிவராமன் நினைவு அருகே வரும் போது ஊர்வலத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் ரகளை செய்து சத்தம் போட்டனர்.

இதுக்குறித்து ஜம்புவானோடை கிராம நிர்வாக அலுவலர் ராஜராஜசோழன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து 4-வாலிபர்களையும் கைது செய்தார்.

நன்றி :MUTHUPETTAI BBC

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)