தகவல் தொழில்நுட்பம் என்பது தொலைவிலிருக்கும் நம் நண்பர்களுக் கும், உறவினர்களுக்கும் தகவல்களை பரிமாரிக் கொள்ளவும், அவர்களு டன் தொடர்பில் இருக்கவும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த தகவல் தொழில்நுட்பமானது தற்பொழுது தவறாகப் பயன்படுத்தப்படுவதாக தோன்றுகிறது.
கடந்த ஆறு மாதங்களாக 'வாட்ஸ் அப்' மற்றும் 'ஃபேஸ்புக்' -இல் பரிமாறப் படும் விஷயங்களைப் பார்த்ததில், கடுப்பாகி ஏதாவது இந்த உலகத்துக்கு சொல்லியே ஆகணும்னு எழுதப்படும் பதிவுதான் இது.ஹர
ஹர மகாதேவகி
வாட்ஸ்அப்பில்்பாகி அலைபேசியை உடைக்கும் அளவுக்கு கோபம் தந்த ஒரு விஷயம்தான் இந்த 'ஹர ஹர மகாதேவகி'. ஏதோ ஒரு நல்ல மனிதரால் பதிவேற்றப்பட்ட ஒலிப்பதிவு அது. ஐயர் பாஷையில் ஆன்மிகவாதிபோல் பேசத்துவங்கும் இவர் திடீர் என ஆபாசமாகவும் அசிங்கமாகவும் பேசுகிறார். அவரின் அந்த ஆபாசமான வரிகளில் என்ன நகைச்சுவையைக் கண்டார்களோ தெரியவில்லை, மக்களிடம் அந்த பதிவேற்றம் பலரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைப்போன்ற பதிவுகளை மற்றவர்களுக்குப் பகிராதீர்கள். பெரும்பாலும் 'வாட்ஸ் அப்' உபயோகிப்பது மாணவர்களும் இளைஞர்களும்தான். இதைபோன்ற பதிவுகளைக் கேட்டு, அரும்புகளும் அதன் அர்த்தங்களைத் தேடித் தவிக்கின்றன. இதைபோன்ற பதிவுகளை செய்யும் நல்லவர்களை தயவுசெய்து ஊக்குவிக்காதீர்கள். அதைப்போன்ற வார்த்தைகளை நாம் கேட்டு பழகிவிட்டால், மற்றவர்களிடம் பேசும்போது நமக்கே தெரியாமல் நம் வாயிலிருந்து அந்த வார்த்தைகள் உதிர்ந்துவிடும் அபாயம் உண்டு. இதனால் பல பிரச்னைகள் உருவாவதுடன் உறவுகளிடம் பிரிவும் ஏற்படலாம்.
-சூரிய குமார்
Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது