முத்துப்பேட்டை அருகே 95 வெடி குண்டுகளுடன் நின்ற வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
முத்துப்பேட்டை அருகே தில்லை விளாகத்தில் நேற்று மாலையில் இருந்து ஒரு மினி வேன் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தது.
இது பற்றிய தகவல் கிடைத்ததும், இரவு 9 மணியளவில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சென்று வேனில் சோதனை நடத்தினர்.
இதில் அந்த வேனில் சணல் பயன்படுத்தி செய்யப்பட்ட 95 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தன.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் வேனுக்கு அருகில் நின்று கொண்டிருந்த அதன் டிரைவர் உள்ளிட்ட 4 பேரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வெடி குண்டுகளுடன் இருந்த வேனையும் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
நன்றி :MUTHUPET NEWS
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது