தன் வயிற்றை வீடாக வழங்கிய தாய்க்கு தன் வீட்டில் இடமளிக்காத பிள்ளைகள்!

Editorial
0

 வயது முதிர்ந்த பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் தவிக்க விட்டு தங்களின் மனைவி மக்களுடன் மட்டுமே இருக்க ஆசைப்படும் கொடூர குணம் படைத்த பிள்ளைகளுக்கான பதிவு இது.


தன் வயிற்றில் பத்து மாதங்கள் சுமந்து, அனைத்து இன்பங்களையும் இழந்து, அனைத்து துன்பங்களையும் தாங்கிக் கொண்டு,  பத்து மாதங்கள் நரக வேதனையிலும் தனக்கு குழந்தை பிறக்க போகிறது என்ற ஆறுதலை மட்டும் மனதில் வைத்து தன்னை பெற்றெடுத்த தாயை இப்படி நடு ரோட்டில் தவிக்க விட்டுச்சென்ற இந்த கொடுர மனம் படைந்தவர்களை என்னவென்று சொல்வது?

குழந்தை பிறந்த பின்பு தன் இரத்தத்தை பாலாக அளித்து குழந்தைக்காக அனைத்து இன்பங்களையும் இழந்து தூக்கமின்றி, உணவின்றி குழந்தை வளரும் வரை வெளியில் செல்ல முடியாமல் குழந்தையையே வாழ்கை என்று நினைத்த அந்த மங்கையை நடுரோட்டில் தவிக்க விட்ட இந்த அரக்கர்களை என்ன செய்வது?

வளர்ந்த பின்பு நன்றாக படிக்க வைப்பதற்க்காக செல்வங்களையெல்லாம் வாரி இறைத்து தன் மகனை நல்ல ஆளாக ஆக்குவதற்க்காக பாடுபட்டு பிடித்தவற்றையெல்லாம் வாங்கிக் கொடுத்து ராஜாவை போல் வளர்த்த அந்த அரசியை நடுரோட்டில் விட்டுச்சென்ற அந்த தீயவர்களை என்னவென்று சொல்வது?

பருவம் வந்த பின் நல்ல முறையில் திருமணம் செய்து தன் பிள்ளையை பார்த்து அகம் மகிழந்த அந்த நல்ல மனம் படைத்த தன் தாயின் மனதை உடைத்தெரிய இவனுக்கு எப்படி மனம் வந்தது?

தன் பிள்ளைக்கு துன்பம் வரும் சமயம் அதை தனக்கு வரும் துன்பமாக எண்ணி தொலோடு தோல் கொடுத்த அந்த நல்ல நெஞ்சை காயப்படுத்த இவனுக்கு எப்படி மனம் வந்தது?

தன்னை தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற நடுரோட்டில் தவிக்க விட்டு சென்ற இவனுக்கு இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற சிந்தனை வரவில்லையா?

"வாழ்க்கை என்பது வட்டம்" என்பார்கள். தன் பெற்றோரை தனியே சாலையில் அனாதையாக தவிக்க விட்ட இவனை இவனது பிள்ளைகள் இந்த நிலையில் விடமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

நாம் நம் குழந்தைகள் மீது வைத்த பாசத்தை தானே நம் மீதும் நமது பெற்றோர்கள் வைத்து நம்மை வளர்த்திருப்பார்கள் என்ற எண்ணம் ஒருவனுக்கு வந்தால் அவன் ஒருபோதும் தன்னுடைய பெற்றோருக்கு தீங்கிழைக்க மாட்டான்.

தாயின் காலடியில் சுவர்க்கம் உள்ளது என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். எனவே பெற்றோரை மதித்து அவர்களின் கடமையை நிறைவேற்றி இம்மையிலும் மறுமையிலும் வெற்றியாளர்களாக ஆகுவோமாக.

பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்: இன்றைய பெற்றோர்கள் தன்னுடைய பிள்ளைகளுக்கு "நன்றாக படித்து நன்றாக சம்பாதிக்க வேண்டும்" என்று உபதேசம் செய்கிறார்களே அன்றி யாரும் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை தன்னுடைய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பதில்லை. இனி வரும் காலங்களில் தன்னுடைய பிள்ளைகளிடம் பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய மரியாதைகளையும் கடமைகளை பற்றியும் உபதேசம் வழங்கி நம் பிள்ளைகளை பெற்றோர்களை மதித்து நடப்பவர்களாக ஆக்குவோமாக!

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி


சிந்திப்போம்! செயல்படுவோம்!
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)