அதிரை அருகே பயங்கர தீ விபத்து!(படங்கள் இணைப்பு)

Unknown
0


அதிரை அருகே தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அதிரை அருகே துவரங்குறிச்சியில் தேங்காய் நார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பல தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.இந்நிலையில் இன்று மதியம் 2.00 மணி அளவில் பலத்த காற்று வீசியது இதில் அந்த தொழில் சாலையில் உள்ள மின் இணைப்பில் இருந்து தீ போரியல்கள் சுத்தம் செய்யப்பட்ட தேங்காய் நார் துகள்கள் மீது விழுந்தது. இதனால் அங்கு தீடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

காற்றின் வேகம் காரணமாக, தீ விபத்தை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. நீண்ட போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். தீயை கட்டுப்படுத்தினாலும், நார் துகள்களின் குவியலில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறிக்கொண்டே இருந்தது. குவியலுக்குள் நெருப்பு பரவிக்கொண்டு தான் இருந்தது. இதையடுத்து, தீயை முற்றிலும் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து தண்ணீரை பீச்சி அடித்தனர். இதனால் அந்த பகுதி பரப்பரப்பாக காணப்படுகிறது. 

-களத்திலிருந்து நமது நிருபர் மகேஷ்











Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)