அதிரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ம.ம.க வின் போராட்டம்! (படங்கள் இணைப்பு)

Editorial
0

அதிரை பேரூராட்சியை கண்டித்து ம.ம.க சார்பாக இன்று மாலை 4.30 மணியளவில் பேரூராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

 அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 19வது வார்டுகளில் ம.ம.க கட்சியை சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். இதனால் அதிரை பேரூராட்சி அரசியல் காழ்புணர்ச்சியுடன் இந்த வார்டுகளுக்கு எந்தவொரு வசதியையும் செய்யவில்லை என்றும் இந்த வார்டு கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளுக்கு தேவையான கோரிக்கை மனுக்கள் பல வழங்கியும் எந்தவிதமான செயல்பாடும் இல்லாத காரணத்தால் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதற்க்கு மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டு கண்டன உரையும் கோஷங்களும் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் பேரூராட்சி மன்ற கூட்டதில் அதிரை சேர்மன் அஸ்லம் அவர்கள் இந்த போராட்டம் குறித்து அலெட்சியமாக பதிலளித்ததாக வெளியே வந்த கவுன்சிலர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூற கோபமடைந்த அவர்கள் பேரூராட்சி உள்ளே புகுந்து அலுவலகத்தை முற்றுகையிட்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

 இதனை அடுத்து போலிஸார் கேட்டுக்கொண்டதற்கிணங்க சாலை மறியல் மற்றும் முற்றுகை கைவிடப்பட்டு ஆர்ப்பாட்டமும் கண்ட்ச்ன உரையும் நடைபெற்று வருகின்றன. இதில் 200க்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு தங்கள் எதிர்பை வெளிபடுத்தி வருகின்றனர்.










Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)