அதிரை AFFA அணி அறிவிப்பு - தேர்வு முடியும் வரை மைதானம் பக்கம் வராதீங்க!

Editorial
0
பொதுத்தேர்வு முடியும் வரை மாணவர்கள் விளையாட வர வேண்டாம் என அதிரை AFFA கால்பந்து அணி கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறுத்து அந்த அணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, "கடந்து சென்ற நாட்களில் கண்ணியம் மிகுந்த ரமலான் மாதம் முடிந்து ஈது பெருநாளை கொண்டாடி இறைவனின் கடமைகளை நிறைவேற்றி அதன் நன்மைகளை ஈருலகிலும் அல்லாவின் கருணையே எதிர்பார்த்து உள்ளோம் அல்லாஹ் நமது அமல்களையும் நல்ல நோக்கத்தையும் நிறைவேற்றி தர போதுமானவன்.

இந்த நிலையில் நாளை முதல் 10,11,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு பொது தேர்வு நடைபெற இருப்பதால் மேற்கண்ட வகுப்பில் படிக்கும் மாணவர்கள் தங்களின் படிப்பில் கவனம் செலுத்தி அனைத்து தேர்வுகளிலும் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற உங்கள் அனைவரையும் நமது அணியின் அனைவர் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

அது சமயம்  அனைத்து தேர்வுகளும் முடியும் வறை மேர்கண்ட வகுப்பில் படிக்கும் அத்துணை மாணவர்களும் தேர்வு முடியும் வறை நமது மைதானத்திலோ அல்லது வேறு மைதானத்திலோ நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அன்புடனும் கண்டிப்புடன் கேட்டு கொள்கின்றோம்.

உங்களின் எதிர்காலமே உங்கள் குடும்பத்தின் எதிர்காலம், நமது அணியின் எதிர்காலம் மற்றும்  நமது சமுதாயத்தின் எதிர்காலம், எனவே இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அத்துணை மாணவர்களையும் மீண்டும் ஒருமுறை உண்ணில் ஒருவனாக உரிமையுடன் கேட்டு கொள்கின்றோம்.

மேற்கண்ட வீரர்கள் தவிர்த்து மற்ற அனைத்து உறுப்பினர்களும் தவறாது விளையாட வரும்படி அன்புடன் அழைக்கிறோம்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)