டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்வு...இன்று முதல் அமல்!

Editorial
0

டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்வு.. நள்ளிரவு முதல் அமல்!டீசல் விலை ஒரு லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்து வருகின்றன. இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு,கச்சா
எண்ணெய்விலை உயர்வு ஆகியவற்றைக் காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே இருக்கின்றன.
தற்போது டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் வரை உயர்த்தி அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது 6வது முறையாக டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மே 31-ந் தேதியன்று கடைசியாக டீசல் விலை உயர்த்தப்பட்டது.
சென்னையில் டீசல் விலை வாட் வரியுடன் 61 காசுகள் உயர்ந்து ரூ53.53க்கு விற்பனை செய்யப்படும்.



Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)