(செந்தமிழ் -->அதிரை தமிழ்) அகராதி

1
செந்தமிழ் முதல் சென்னை தமிழ் வரை பல வகையான பேச்சு வழக்கங்ககள் தமிழில் உண்டு. உதாரணத்திற்க்கு மதுரை தமிழ், கோவை தமிழ், நெல்லை தமிழ், வேலூர் தமிழ், சென்னை தமிழ் போன்று ஒவ்வொரு
மாவட்டத்திற்க்கும் ஒரு
வகையான பேச்சு வழக்கு உள்ளது இந்த வரிசையில் அதிரை தமிழும் ஒன்று. ஆமாங்க நம்ம ஊரு பேச்ச பத்தித் தான் நம்ம இப்போ பாக்க போறோம். நம்ம ஊர் பேச்சுக்கும் செந்தமிழ் பேச்சுக்கும் உள்ள வித்தியாசத்த பத்தி
டிக்ஸ்னரி (DICTIONARY) மாதிரி இனி வாரா வாரம் பாக்கப்போறோம்..

சரி மொதல்ல நம்ம ஊரு ஸ்பெஷல் ஈக்கிதுலேந்து ஆரம்பம்பிக்கலாம்


உலக பேச்சு-------------அதிரை பேச்சு

இருக்கிறது-------------ஈக்கிது

நினைத்தால்----------நெனச்சா

குழம்பு---------------------ஆனம்

ஆக கடைசி------------துன்யா கடைசி

சோப்பு---------------------சவுக்காரம்

நன்றாக உள்ளீர்களா-------------------சொகமா இருக்குரியலா

பிடித்து-----------------புடிச்சு

பழைய சோறு--------------நீச்சோறு

பார்த்தால்---------------பாத்தா

அண்ணன்---------------காக்கா

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. அழகிய ஆக்கம் நம்ம ஊரின் பேச்சை உலகம் அறிய செய்ததற்க்கு நன்றி, பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
Post a Comment