பட்டுக்கோட்டையில் நடந்த தடகளப் போட்டியில் அதிரை மாணவர் சாதனை!

0
வருடா வருடம் பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்ளுக்கு தடகளப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளில்
வெற்றியடையும் மாணவர்களுக்கு பரிசும் மேலும் அவர்களுக்கு மாவட்ட அளவில் நடக்கும் தடகளப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது. இதில் அதிரையை சேர்ந்த மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் பல சாதனைகளைப் படைத்து வருகின்றனர். இந்த வரிசையில் இந்த வருடம் அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் யூசுஃப் என்ற மாணவர் இந்த வருடம் குண்டு எறிதல் போட்டியில் மூண்றாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்கள்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)