ஆட்கொல்லி நோய்க்கு ஆட்கொள்ளாதே!
இந்த என் கவிதை வரிகளை அதிரையின் அற்புதப் பாடகர் சகோதரர் ஜஃபருல்லாஹ் அவர்களின் உருக்கமான குரலில் கேளுங்கள்: இந்த இணைப்பைச் சொடுக்குக:
http://www.youtube.com/watch? v=We4WbmhSs6A&feature=youtu.be
"கவியன்பன்” கலாம்
இந்த என் கவிதை வரிகளை அதிரையின் அற்புதப் பாடகர் சகோதரர் ஜஃபருல்லாஹ் அவர்களின் உருக்கமான குரலில் கேளுங்கள்: இந்த இணைப்பைச் சொடுக்குக:
http://www.youtube.com/watch?
புண்ணைத்
தேடிப் புறப்படும் ஈயாய்த் (தீயப்)
பெண்ணைத் தேடிப் பெருவினை நோயாய்க்
கண்ணைக் கொன்றக் கருமையாய் வாழ்க்கை
மண்ணி லுள்ளோர் மதித்திடாப் போக்காய்
அற்ப இன்பம் அடைந்திடும் மோகம்
சொற்ப வாழ்வில் சுருங்கிடும் தேகம்
விற்கும் மேனி விளைத்திடும் மோசம்
கற்பைப் பேணாக் கழிசடை வாசம்
மங்கை யான மனைவியே மாண்பாம்
நங்கை இன்பம் நலவுடன் காண்பாய்
எங்கோ சென்று இழப்பது ஏனோ?
பங்கம் கிட்டும் பழக்கமும் வீணே!
தாயும் ஈன்றாள் தரணியில் மேவ
நோயும் கொண்டால் நொடியினில் சாவு
வாயில் புண்ணை வளர்க்குமாட் கொல்லி
பாயில் தூங்கிப் புலம்புவாய்ச் சொல்லி
நாணம் கொண்டு நல்முடன் ஈமான்
பேணச் செய்தால் பெருகிடும் சீமான்
காணும் செல்வம் கணக்கிலா ஏட்டில்
வேணும் அச்சம் விரைவுடன் நாட்டில்!
பெண்ணைத் தேடிப் பெருவினை நோயாய்க்
கண்ணைக் கொன்றக் கருமையாய் வாழ்க்கை
மண்ணி லுள்ளோர் மதித்திடாப் போக்காய்
அற்ப இன்பம் அடைந்திடும் மோகம்
சொற்ப வாழ்வில் சுருங்கிடும் தேகம்
விற்கும் மேனி விளைத்திடும் மோசம்
கற்பைப் பேணாக் கழிசடை வாசம்
மங்கை யான மனைவியே மாண்பாம்
நங்கை இன்பம் நலவுடன் காண்பாய்
எங்கோ சென்று இழப்பது ஏனோ?
பங்கம் கிட்டும் பழக்கமும் வீணே!
தாயும் ஈன்றாள் தரணியில் மேவ
நோயும் கொண்டால் நொடியினில் சாவு
வாயில் புண்ணை வளர்க்குமாட் கொல்லி
பாயில் தூங்கிப் புலம்புவாய்ச் சொல்லி
நாணம் கொண்டு நல்முடன் ஈமான்
பேணச் செய்தால் பெருகிடும் சீமான்
காணும் செல்வம் கணக்கிலா ஏட்டில்
வேணும் அச்சம் விரைவுடன் நாட்டில்!
,
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது