
நேற்று மாலை அதிரை மெயின் ரோட்டில் பேருந்தில் பைக் மோதியதில்
இளைஞர் லேசான காயங்களுடன் தப்பினார். நமதூர் மெயின் ரோடு அருகே முத்துப்பேட்டை பேருந்து
ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த பேருந்தின் குறுக்கே மோட்டார் பைக்கில்
சாலையை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக அந்த இளைஞர் மீது பேருந்து மோதியது. இதில்
அந்த இளைஞர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த விபத்தை அடுத்து
நேற்று மாலை 6:00 மணியளவில் அதிரை காவல் நிலையம் முன்பு கடுமையான கூட்டம் கூடியது.
இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது