அதிரையில் விவசாய நிலங்களை நாசப்படுத்தும் காட்டுப் பன்றிகள்..!

0

அதிராம்பட்டினம் அலையாத்தி காடுகளிலிருந்து காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்ட விவசாய நிலங்களில் புகுந்து நாசப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே அடர்ந்த அலையாத்தி காடுகள் உள்ளன. காடுகளை ஒட்டி முடுக்குக்காடு, கரிசக்காடு, கருங்குளம், வள்ளிக் கொல்லைக்காடு, மஞ்சவயல், மறவக்காடு ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமத்தில் விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளன. அனைத்து கிராமங்களிலும் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இந் நிலையில் அதிராம்பட்டினம் அலை யாத்தி காடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து கதிர்களை வேட்டையாடுகின்றன.


மேலும் வயல் முழுவதும் உள்ள பயிர்களையும் மிதித்து நாசப்படுத்துகிறது. கூட்டம் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகளைக் கண்டு விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இக்காட்டு பன்றிகள் இரவு 12 மணிக்கு மேல்தான் விவசாய நிலங்களுக்குள் புகுகிறது. இதனால் விவசாயிகள்  வயல்களில் குடிசை போட்டு இரவு முழுவதும் காவல்காத்து வருகின்றனர். பன்றிகளை விரட்ட பட்டாசு வெடித்து வருகின்றனர். சில விவசாயிகள் வயல்களில் விளக்குகளை எரியவிட்டுள்ளனர். சிலர் சட்டைகளை தொங்கவிட்டு மனித நடமாட்டம் இருப்பது போல் காட்டுகின்றனர். சில விவசாயிகள் தகர டின்களை கம்பால் அடித்து ஓசை எழுப்பி வருகின்றனர்.

பாடுபட்டு வளர்த்த பயிர்களின் அறுவடைக்கு இன்னும் 15 தினங்களே உள்ளதால் இரவு முழுவதும் கண் விழித்து பயிர்களை பாதுகாத்து வருகின்றனர். காவல் இல்லாத வயல்களில் பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. எனவே மாவட்ட வன அலுவலர் பன்றிகளை விவசாய நிலங்களுக்குள் புகவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயி ரெகுநாதன் என்பவர் கூறுகையில்; தண்ணீர் தட்டுப்பாடு இருந்த நிலையில் மிகவும் சிரமப்பட்டு பயிரிட்டு அறுவடை செய்யும் நிலையில் அலையாத்திக் காடுகளிலிருந்து காட்டுப்பன்றிகள் நிலங்களுக்குள் புகுந்து கதிர்களை மேய்கின்றன. விவசாய நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகளை புக விடாமல் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதோடு வனவிலங்குகள் கிழக்கு கடற்கரை சாலையை கடந்து விவசாய நிலங்களுக்கு வரும் போது சில பன்றிகள் வாகனத்தில் அடிபட்டு இறந்து விடுகின்றன. எனவே வனத்துறை அதிகாரிகள் காடுகளை விட்டு வனவிலங்குகள் வராமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

நன்றி: தினகரன்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)