கையால் எழுதிய பாஸ்போர்ட்கள் செல்லாது

0


சர்வதேச விமான போக்குவரத்து நிறுவன உத்தரவுப்படி, உலகம் முழுவதும் வழங்கப்பட்டுள்ள கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை மாற்றிக்கொள்ள அடுத்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளன. அதன்பிறகு அந்த பாஸ்போர்ட்கள் செல்லாததாகி விடும். பின்னர் இத்தகைய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் குடியேற்ற நடைமுறை கள் தொடர்பான பிரச்னைகளை தவிர்ப்பதற்காக அவற்றை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்கள் 2001ம் ஆண்டுக்கு முன்பு விநியோகம் செய்யப்பட்டவை. 

பெரும்பாலான நாடுகள் இந்த பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்துவதை படிப்படியாக ஒழித்து விட்டன. பாஸ்போர்ட் அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட்ட பிறகு, 2002ம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்பட்ட பாஸ்போர்ட் விவரங்களே பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவ ர்கள், இது தொடர்பான அரசு கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட புதிய விஷயங்கள் அறிந்து கொள்ள முடியா மல் போய்விடும். மேலும், கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்களில் உள்ள விவரங்களை கணினிகளால் ஸ்கேன் செய்து அறிந்து கொள்ளும் வசதி இல்லை. 

துகுறித்து பாஸ்போர்ட் மண்டல அதிகாரி ஒருவர் கூறுகையில்,  ‘கடந்த 2000ம் ஆண்டு வரை 20 ஆண்டு செல்லத்தக்க பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டன. அவற்றை வைத்திருப்பவர்களுக்கு காலக்கெடு 24 நவம்பர் 2015க்கு மேல் இருந்தாலும், சர்வதேச விமான போக்குவரத்து நிறுவன உத்தரவுப்படி அவற்றை பயன்படுத்த முடியாது. எனவே  கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட், 20 ஆண்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அவர்கள் தங்கள் பாஸ்போர்ட்களை காலக்கெடுவுக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.

-dinakaran

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)