அன்புக்குரிய அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு [ AAF ] நிர்வாகிகள் மற்றும் அனைத்து சகோதரர்கள்-சகோதரிகள் மற்றும் அதிரை வலைத்தளங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
கடந்த பத்து தினங்கள் என் மாமா நெய்னா முஹம்மது அவர்கள் திடீர் சுகவீனப்பட்டு,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நாட்டப்படி மரணமடைந்தது வரை, எங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் நீங்கள் அனைவரும் காட்டிய பாசம்,நேசம்,உபசரிப்பு,உதவி,துஆ இப்படி எங்களை ஆறுதல் படுத்தினீர்கள்.மருத்துவமனை,ஜனா ஸா தொழுகை,நல்லடக்கம் என்று பெருந்திரளாக கலந்து கொண்டீர்கள்.உங்கள் வேலைகளை ஒதுக்கினீர்கள்,தூக்கம் தொலைத்தீர்கள்.இப்படி எல்லா வகையிலும் ஆறுதல் தந்தீர்கள், இதற்கு கைமாறு கிடையாது.மனிதனுக்கு நன்றி செலுத்தாதவன், இறைவனுக்கு நன்றி செய்ய முடியாது.
இதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கும்,உங்கள் குடும்பங்களுக்கும் இரண்டு உலகிலும் வெற்றி தருவானாக,ஆமீன்.
இன்ஷா அல்லாஹ்,இன்னும் இந்த அமைப்பை அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு [ AAF ] கட்டி எழுப்ப வேண்டும்.நாமும்,நம் சந்ததிகளும் பயன் பெற வேண்டும்,இன்ஷா அல்லாஹ் முஸ்லிமாக வாழ்ந்து,முஸ்லிமாக மரணிக்க வேண்டும்.ஆமீன்.
மேலும், அதிரை பிறை,அதிரை போஸ்ட், அதிரை நியூஸ், அதிரை எக்ஸ்பிரஸ், போன்ற தளங்கள் மரணம் பற்றிய செய்தியை வெளியிட்டு,உலக முழுதும் உள்ள அதிரை மக்களின் துவாக்கள் கிடைக்க காரணமாக அமைந்தன,அவைகளுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் மக்ஃபிரத்துக்கு துவா செய்யுங்கள்.
அல்லாஹ் மட்டுமே என்றென்றும் உயிரோடு இருப்பவன்,நாம் அனைவரும் மரணமடைய வேண்டியவர்களே.அல்லாஹ்வுக்காக, இந்த மரணத்தை-இழப்பை பொருந்திக் கொண்டோம், அல்லாஹ் நமக்கு முன் சென்ற அன்னாரையும்,பிறகு போக போகிற நம்மையும் மன்னிப்பானாக,ஆமீன்.
அர.அப்துல் லத்தீப்
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது