முத்துப்பேட்டையில் கெஜ்ரிவால் உருவ பொம்மை எரிப்பு, 50 பேர் கைது..!

0
முத்துப்பேட்டை பழைய பஸ்டாண்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி முதல்வரும் ஆம்அதமி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரசையும் அதன் தலைவர்களையும் தவறான விமர்சனம் செய்ததை கண்டித்தும் மன்னிப்பு கேட்கக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் உருவ பொம்மையை எரித்து வட்டார காங்கிரஸ் நிர்வாகி காமராஜ் தலைமையில் நடைபெற்றது. 




நகரத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகி தாஹிர், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான கோசங்கள் எழுப்பினர். பின்னர் மறைத்து வைத்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால் உருவ பொம்மையை தீயிட்டு கொலுத்தினர். 



இதனால் பழைய பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து சுமார் அரை மணி நேரம் தடைபட்டது. இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஹாஜா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முகைதீன் பிச்சை, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி காந்தி நாராயணன், மாவட்ட செயலாளர் சுந்தர்ராமன், மற்றும் நிர்வாகிகள் தங்கராசு, கோவன்னா, திருநாவுக்கரசு, தஸ்தஹிர் உட்பட 50 காங்கிரஸார்களை முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் கைது செய்தார்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)