முஸ்லிம்கள் மீது காவல்துறையினர் தடியடி! இராமநாதபுரத்தில் பரபரப்பு

Unknown
0
 பிப்ரவரி 17 பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இன்று நடத்திய யூனிட்டி மார்ச் நிகழ்ச்சிக்கு காவல்துறை முறையாக அனுமதி கொடுத்தனர் . அணிவகுப்பு ஆரம்பித்த சில நிமிடங்களில் காவல் துறையால் ஏற்பாடு செய்யப்பட சில விஷமிகள் கற்களை வீசி பதட்டத்தை ஏற்படுத்தினர். இந்த வாய்ப்பிற்காக காத்துக்கொண்டு இருந்த காவல் துறையினர் முஸ்லிம்கள் மீது கடுமையாக தடியடி நடத்தி உள்ளனர் . இதில் வழக்கறிஞர்கள் உட்பட பொதுமக்கள் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கற்களை வீசியவர்களில் இருவரை பிடித்து பொதுமக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர் அவர்கள் இருவரும் காவல் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இன்ஃபார்மர்கள் என்று தெரியவருகிறது. கற்களை வீசிய மேலும் சிலர் தப்பித்துள்ளனர்.





PFI மாநில தலைவர் அறிவிப்பு:-

காவல்துறை பேரணி மற்றும் அணிவகுப்பிற்கு அனுமதி தந்திருந்தனர். அதன் படி அணிவகுப்பு மற்றும் பேரணி திட்டமிட்டபடி தொடங்கியது.

ஆனால், காவல்துறையால் திட்டமிட்டு பொதுமக்களுக்கு ஊடாக நுழைக்கப்பட்டிருந்த விஷமிகள் கல் வீசினர். உடனே, காவல்துறை கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியிருக்கிறது.

சம்பவ இடத்திலேயே இதில் ஈடுபட்ட இரண்டு பேரை பிடித்து, காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் இருவரும் இன்பார்மர்கள் என ஊர்ஜிதமாகியுள்ளது.

இன்னும் இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர்.

மேலும் PFI  மாநில தலைவர் A.S. இஸ்மாயில் அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டி விரைவில் வெளியிடப்படும்  .


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)