ரயிலை தவறவிட்டால், முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்ய முடியாது என
வெளியான தகவலை ரயில்வே வாரியம் மறுத்துள்ளது.
முன்பதிவு செய்த டிக்கெட்களை ரத்து செய்து பணம் திரும்ப பெறுவதில், ஏற்கனவே
நடைமுறையிலுள்ள விதிமுறைகளே பின்பற்றப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம்
தெரிவித்துள்ளது.
முன்பதிவு செய்தவர்கள் ரயிலை தவறவிட்டால், ரயில் புறப்பட்ட இரண்டு மணி
நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்தால், பாதிக் கட்டணம் திருப்பித்
தரப்படும் என்கிற நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் எனவும் ரயில்வே
விளக்கம் அளித்துள்ளது.
ஆர்.ஏ.சி, வெயிட்டிங் லிஸ்ட்
ஆர்.ஏ.சி டிக்கெட் வைத்திருப்பவர்களும், காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்
வைத்திருப்பவர்களும், ரயில் புறப்பட்ட மூன்று மணி நேரத்திற்குப் பின்னர்
பயணச் சீ்டடை ரத்து செய்ய முடியாது என்கிற நடைமுறையும் தொடரும் என ரயில்வே
தெரிவித்துள்ளது.
ரயில்வே நிர்வாகம் மறுப்பு
ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் ரயிலை தவறவிட்டால், அதற்கான
கட்டணம் திருப்பித் தரப்படமாட்டாது என கடந்த இரு தினங்களுக்கு முன்னர்
பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதனை மறுத்துள்ள ரயில்வே நிர்வாகம்
இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.
thanks to :
thanks to :
thats tamil
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது