இந்தியாவில் விரைவில் இ-பாஸ்போர்ட் அறிமுகம்!

Editorial
0
இந்தியாவில் இ-பாஸ்போர்ட் முறை நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் வெளிநாட்டுப் பயணம் இன்னும் எளிதாகும் என தெரிகிறது.

பாஸ்போர்ட் பெற்றவர்களைப் பற்றிய தகவல்களைப் பாதுகாப்பதற்காகவும்,போலி பாஸ்போர்ட் பயன்பாட்டை தடை செய்வதற்காகவும் அடுத்த ஆண்டு முதல் எலக்ட்ரானிக் பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், பயணியைப் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய எலக்ட்ரானிக் சிப் கொண்ட பிளாஸ்டிக் வடிவ பாஸ்போர்ட், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பாஸ்போர்ட்க்கு பதிலாக வழங்கப்படும் எனவும் மூத்த பாஸ்போர்ட் அதிகாரி முக்தேஷ் கே பர்தேஷி தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 2013ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 85லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த இ-பாஸ்போர்ட் முறையின் மூலம் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)