பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அ.தி.மு.க.- தி.மு.க. நேரடி மோதல்

Unknown
0

         இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், முதல் முறையாக 1952-ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு பொது தேர்தல் நடத்தப்பட்டது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு மிகப்பெரிய கட்சியாக விளங்கிய காங்கிரஸ் தலைமையில்தான் அப்போது ஆட்சிகள் அமைந்தன.

தமிழகத்தில் 1967-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கியிருந்தது. அந்த கட்சியின் தலைமையில் தான் தேர்தல் கூட்டணிகள் அமைந்தன. ஆனால், 1967-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 25 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரசை வீழ்த்தியது. தற்போது, 45 ஆண்டுகள் ஆன நிலையிலும், காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் எழுந்திருக்க முடியவில்லை.

தமிழகத்தில், தி.மு.க.-அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான் அதன் பிறகு பாராளுமன்ற தேர்தலை சந்தித்து வருகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிடுகிறது.

அதே நேரத்தில், தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் (சிதம்பரம், திருவள்ளூர்), புதிய தமிழகம் கட்சி (தென்காசி), மனிதநேய மக்கள் கட்சி (மயிலாடுதுறை), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (வேலூர்) ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி உள்ளிட்ட மீதமுள்ள 35 தொகுதிகளிலும் தி.மு.க.வே நேரடியாக போட்டியிடுகிறது.

மொத்தமாக பார்க்கும்போது, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில், புதுச்சேரி உள்பட 35 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நேரடியாக மோதுகிறது.

பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் அ.தி.மு.க. - தி.மு.க. அதிகப்படியான தொகுதிகளில் மோதுவது இதுவே முதல்முறையாகும்.


 

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)