வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்களிக்க ஓர் அறிய வாய்ப்பு..!

0

பணி நிமித்தமாகவோ, படிப்பு காரணமாகவோ வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றமுடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர். இனி அவர்களும் தங்கள் சொந்த தொகுதியில் நிற்கும், தனக்கு பிடித்த வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும்.
என்.ஆர்.ஐ-கள் (வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்) வாக்களிக்கக்கூடிய முறை பற்றிய விவரங்களை தேர்தல் கமிஷனின் இந்த இணைப்பில் காணலாம் :
வாக்குரிமை கோரும் 6ஏ படிவத்தை  கீழே இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம் :
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்த 6ஏ படிவத்தை தரவிறக்கி, பூர்த்தி செய்யவேண்டும். பின்னர் அவர் வசிக்கும் நாட்டிலிருக்கும் தூதரக அதிகாரி ஒப்பமிட வேண்டும். பின்னர் இந்த படிவத்தை தன்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். தேர்தல் அதிகாரிகள் சான்றுகளை சரிபார்த்து, விண்ணப்பித்த வெளிநாடுவாழ் இந்தியர் வாக்களிக்க அனுமதி அளிப்பார்.
ஒரு கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாடுகளில் வசிக்கும் நிலையில், என்.ஆர்.ஐ.களுக்கான வாக்களிக்கும் வசதி இந்திய ஜனநாயகத்தின் மாண்பை மேலும் வலுவாக்குகிறது.
உங்கள் உறவினர்கள் யாராவது வெளிநாட்டில் இருந்தால், இத்தகவலை அவர்களோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)