
மதீனா நகரில் விளையும் உயர் ரக பேரீச்சம் பழத்தின் பெயர் அஜ்வா. இதில் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களைத் தடுக்கின்ற மூலக்கூறுகள் உள்ளன என ரியாதில் உள்ள மன்னர் சவூத் பல்கலைக்கழகம் நடத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புற்றுநோய்த் தடுப்பு மருந்துகளில் அடங்கியுள்ள மூலக்கூறுகளில் பெரும்பாலானவை அஜ்வா பேரீச்சம்பழத்தில் இருக்கின்றன. அமெரிக்காவிலிருந்து வெளிவருகின்ற ‘ஜெர்னல் ஃபார் அக்ரிகல்ச்சர் அன்ட் ஃபுட் கெமிஸ்ட்ரி’ என்ற இதழ் வெளியிட்டுள்ள ஆய்றிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர் பேராசிரியர் முரளிதரன் நாயர் இதில் முக்கிய ஆய்வாளராகச் செயல்பட்டுள்ளார். மன்னர் சவூத் பல்கலைக்கழகத்தின் பேரீச்சம்பழ ஆராய்ச்சித் துறை, மிச்சிகன் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பலர் இந்த ஆய்வுக்கு ஒத்துழைப்புக் கொடுத்துள்ளனர்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது