அதிரைக்கு பெருமை தேடித் தந்த இளைஞர்கள்

0
அதிராம்பட்டினம், தஞ்சை மாவட்டத்தின் கடலோர ஊர்களில் ஒன்று. தென்னை விவசாயத்தாலும், உப்பு உற்ப்பத்தியினாலும், காதில் முகைதீன் கல்லூரியினாலும் இந்த ஊர் பிற் ஊர்காரர்கள் மத்தில் பிரபலமானது.

தற்பொழுது இந்த ஊர் இன்னும் ஒரு விசயத்தினால் பிற ஊர் மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தில் பிரபலம் அடைந்து வருகிறது. அது தான் கிரிக்கெட். நம் ஊர் இளைஞர்களுக்கும் கிரிக்கெட்டுக்கும் அப்படி என்னதான் உறவு என்று தெரியவில்லை, வீட்டுக்கு ஒரு கிரிக்கெட் வீரராவது வந்து விடுகிறார். 

அதிரையில் தெருவுக்கு தெரு கிரிக்கெட் அணிகளும் அவை நடத்தும் தொடர் போட்டிகளும் வருடா வருடம் நடப்பது தான் என்றாலும்  கடந்த 2 வருடங்களாக உண்மையான கிரிக்கெட் தொடர் போல் கிரிக்கெட் பந்தில் விளையாடத் துவங்கி கிரிக்கெட் பந்தில் தொடர் போட்டிகளையும் நடத்த துவங்கியுள்ளனர். மேலும் இந்த போட்டிகளில் கலந்துக்கோண்டு  தங்கள் தனித் திறமையையும் சிறப்பாக வெளிக்காட்டி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க அதிரை கிரிக்கெட் வரலாற்றில் இன்னொரு மைல் கல்லாக அதிரையின் தலை சிறந்த அணிகளில் ஒன்றான AFCC அணி கும்பகோனத்தில் நடக்கும் மாவட்ட அளவிலான தொடர் போட்டியில் கலந்துக்கொண்டு தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. இந்த தொடரில் மாநில அளவிலான தலை சிறந்த வீரர்கள் பலர் கலந்துக்கொண்டு விளையாடி வந்தாலும் அவர்களையெல்லாம் தவிடு பிடியாகிக்கு தங்கள் தனித்திறமையை வெளிக்காட்டி வருகிறது. 

இன்று AFCC அணி மாநில அளவில் சிறந்த அணியான RVMCC அணியுடன் விளையாடி வெற்றி பெற்றது. இதில் குறிப்பிடும் படியாக AFCC அணியை சேர்ந்த நிஜாஸ் மற்றும் இஸ்மாயில் அவர்களின் அபார  ஆட்டத்தினால் அந்த அணி இலகுவாக வெற்றி பெற்றது.

இதன் முலம் மாநில அளவில் சிறந்த அணியாக உருவெடுத்துள்ளது அதிரை AFCC. தற்பொழுது சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்து வருவது போல் இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி அணிக்கும் அதிராம்பட்டினத்துக்கும் மேலும் பெறுமை தேடித்தர அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)