அதிரையில் இன்று மாலை 3 மணியிலிருந்து வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதிரை மக்கள் எப்படா மழை வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். இவர்களின் காத்திருப்புக்கு 4:50 மணியளவில் விடை கிடைத்தது.
கருமேகங்கள் சூழ குளிர்ச்சியான காற்றுடன் கூடிய கன மழை வானை பிளந்துக்கொண்டு பெய்தது. சுமார் 20 நிமிடங்கள் விடாமல் பெய்த இந்த மழையால் அதிரை முழுவதும் குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது.
சில நாட்களாக காலையில் லேசாக தோன்றி மறைந்த இந்த மழை இன்று கன மழையாக உருவெடுத்தது. இதனால் வெயிலின் வாட்டத்தால் களைப்புடன் காணப்பட்ட மக்கள் தற்பொழுது மகிழ்ச்சியடைந்துள்ளனர்.




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது