அதிரை பேரூராட்சியின் அதிரடி அறிவிப்பு!

1
அதிராம்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சி  1வது வார்டு முதல் 21வது வார்டுகளில் உள்ள வணிகம் மற்றும் வீட்டுக்குடிநீர் இணைப்பு பெற்றவர்கள் தங்கள் கடைகள் மற்றும் வீட்டுக் குடிநீர் இணைப்புகளில் நேரடியாக மின்மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சப்படுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என இதற்க்கு முன் இரண்டு முறை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு செய்த நாளிலிருந்து ஒரு வாரத்திற்க்குள் மின்மோட்டார்களை எடுக்க தவறும் பட்சத்தில் பேரூராட்சியின் மூலம் பேரூராட்சி பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகளின் துணையுடன் மின் மோட்டார்களை பறிமுதல் செய்து அதற்கான செலவுத்தொகை தங்களிடம் வசூல் செய்யப்படுவதுடன் காவல் துறை மூலம் F.I.R போடப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என இதன்மூலம் இறுதியாக எச்சரிக்கப்படுகிறது

மேலும் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் இவ்விணைப்பு மீண்டும் வழங்கப்படமாட்டாது என்பதையும் இவ்வறிவிப்பின் மூலம் இறுதியாக எச்சரிக்கப்படுகிறது. இதுவே இறுதி அறிவிப்பு எனவும் இதற்க்கு மேல் அறிவிப்பு செய்ய இயலாது என்பதையும் இறுதியாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த அறிவிப்பின் நகல் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும்,  பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அவர்களுக்கும், வருவாய் கோட்டாட்சியர் அவ்ர்களுக்கும், பட்டுக்கோட்டை வட்டாட்சியருக்கும், காவல் ஆய்வாளர் அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இப்படிக்கு,            
செயல் அலுவலர்,     
தேர்வுநிலை பேரூராட்சி,
அதிராம்பட்டினம்.     

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. மின் மோட்டார் வைக்காமல் தண்ணீர் பைப்பில் வந்தால் யாரும் பல ஆயிரம் செலவு செய்து மின் மோட்டார் வைக்க வேண்டிய அவசியம் இல்லை

    மின் மோட்டார் பொருத்தி இருக்கும் வீட்டிர்க்கெல்லாம் FIR போட்டால் ஊரில் உள்ள போலீசாருக்கு வேறு வேலை பார்க்க முடியாது இதே வேலையாத்தான் திரியனும்

    ReplyDelete
Post a Comment