"பிரியும் தொலைவில் ரமழான்"..!! 

0
பிரியா மனமுடன் என்னை விட்டு
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

பிறை பார்க்கும் ஏக்கத்தை எக்காலமும் எனக்களித்து
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

ஒன்றுக்கு ஏழுநூறு நன்மைகள் எனக்களித்து
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

பசித்தவனின் பசியை பக்குவமாய் உணர வைத்து
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

பயிற்சி பட்டறையில் பொறுமையை கற்பித்து
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

இரவும் பகலும் இறைவணக்கத்தை அதிகப்படுத்தி
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

அளவில்லா சந்தோஷத்தை நோன்பு திறக்கும்போது எனக்களித்து
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

புனித இரவின் தேடலை புத்துணரவோடு எனக்களித்து
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

இருபத்தி ஒன்பதோ, முப்பதோ என குறையும், நிறையுமாய்
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

உயிர் இருக்குமா அடுத்த ரமழானில் உத்திரவாதம் இல்லாமல்
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

 -அஹமது ரிலா
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)