அதிரையில் அட்டூழியம்! பைக்கில் சென்றவர்களை தாக்கி வழிபறி!

0




கீழத்தோட்டம் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் ராஜ்மோகன்(29), அதே ஊர் கீழத்தெருவை சேர்ந்தவர்  செந்தில்(35) ஆகிய இருவர்களும் அதிரையில் இருந்து இன்று இரவு 8:00 மணியளவில் கீழத்தோட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இவர்கள் இராஜாமடம் அருகே சென்று கொண்டிருக்கையில் கையில் உறுட்டு கட்டைகளுடன் 2 இரு சக்கர வாகணங்க்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ராஜ்மோகன், செந்தில் ஆகிய இருவரையும் சரமாறியாக தாக்கி அவர்களிடம் இருந்த 2 சவரன் செயின் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்து தப்பிவிட்டனர்.

இந்நிலையில் காயமடைந்த 2 பேரையும் பின்னால் அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் சிலர் மீட்டு அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதில் கட்டையால் தாக்கப்பட்டதில் ராஜ்மோகனுக்கு தலையிலும், செந்திலுக்கு கழுத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)