குவைத் தியாக திருநாள் முன்னிட்டு 9 நாட்கள் விடுமுறை !

0

தமிழில் தியாகத் திருநாள் என்றும் உருது மொழியில் பக்ரீத் என்றும் அழைக்கப்படும் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய திருநாளாகும் ஆகும். 

இதை அரபு மொழியில் ஈத் அல் - அதா என்றும்  இந்தியாவில் ஹஜ் பெருநாள் என்றும் அழைகின்றனர்.

இத் தியாக திருநாள் வருகிற அக்டோபர் மாதம் 4ம் தேதி சனி
க்கிழமை குவைத், சவூதி அரேபியா,UAE போன்ற உலக நாடுகளில் உள்ள முஸ்லிம்களால் அனுசரிக்கப்பட இருக்கிறது.

இதை முன்னிட்டு அக்டோபர் 3ம் தேதி வெள்ளிக் கிழமை முதல் அக்டோபர் மாதம் 11ம் தேதி சனி கிழமை வரை ஒன்பது நாட்கள் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் குவைத் நாடு விடுமுறை அறிவித்துள்ளது.

இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அராபிய மாதம் துல் ஹஜ் 10-ம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.

இந் நாளிலேயே தான் ஆடு, மாடு மற்றும் ஒட்டகம் போன்ற பிராணிகளை அறுத்து  குர்பானி செய்யப்படுகிறது.

மேலும் முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ் என்னும் புனித பயணம் சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மதினா நகரங்களில் நிறைவேற்றப்படுகிறது.




Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)