இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொண்டவர்களில் 77 பேர் மரணமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் முதுமையின் பாதிப்புகள் காரணமாகவும், உடல் நலக்குறைவு காரணமாகவும் உயிரிழந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை கூறியதாவது:
இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட 1,36,020 இந்தியர்களில் 1,00,020 பேர் ஹஜ் கமிட்டி மூலம் வந்தனர்.
இவர்களில் 77 பேர், புனிதப்பயணத்தின்போது உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவருக்கும் இயற்கையான மரணம் ஏற்பட்டது.
தமிழ்நாட்டிலிருந்து வந்த பயணி ஒருவர் மட்டும் மின்தூக்கியில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழந்தார்.
இதுதவிர, இந்தியாவிலிருந்து வந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள், உடல் நலக் குறைவு காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது