துருக்கி போராட்டத்தில் வன்முறை: 9 பேர் பலி !

0

கொபானி நகரை ஐ.எஸ். இயக்கத்தினரிடம் இருந்து காக்க வலியுறுத்தி, துருக்கியின் தலைநகர் அங்காரா, பெரிய நகரான இஸ்தான்புல் உள்பட பல இடங்களில் குர்து இன மக்கள் நேற்று முன்தினம் பெருமளவில் போராட்டங்கள் நடத்தினர்.

அப்போது வன்முறை மூண்டது. போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்தனர். தண்ணீரைப்பீய்ச்சி அடித்தனர். அப்போது போராட்டக்காரர்களும், போலீசாரும் மோதிக்கொண்டனர். இந்த மோதல்களில் மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த வன்முறை முடிவுக்கு வர வேண்டும் என துருக்கி உள்துறை அமைச்சர் எப்கான் அலா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே கொபானி நகரில், ஐ.எஸ். இயக்கத்தினர் முன்னேறி வருவதாக தகவல்கள் கூறுகின்றன .
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)