தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு சனிக்கிழமை வெளியானது. இதில் அம்மாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையுடன் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து பல இடங்களில் கடையடைப்பு ,உண்ணாவிரதம் ,அமைதி ஊர்வலம் போன்றவை நடைபெற்று வருகிறது .இதனை அடுத்து இன்று காலை பட்டுகோட்டையில் அதிமுக-வினர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர் .
இந்த உண்ணாவிரத்ததில் அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி தலைமையில் பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் ஜவகர்பாபு, நகர செயலாளர் பாரதி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை நகர தலைவர் குமார், நகர செயலாளர் பாண்டியராஜன், அனி சேரா ஓட்டுநர் மாவட்ட தலைவர் பாஸ்கர், முன்னாள் நகரசெயலாளர் விவேகானந்தன் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றம் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
புகைப்படம் &செய்தி உதவி :
I.M.ராஜா
Advertisement






1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது