![]() |
| இடம்: கடற்கரை தெரு பள்ளி, படம்:யாசின் |
இந்த முகாம் அதிரையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் கடந்த 15-ஆம் தேதி தொடங்கின. நவம்பர் 10-ஆம் தேதி இந்தப் பணிகள் நிறைவடைகின்றன.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும்.
சிறப்பு முகாம்களில் வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்டோர் இருப்பர். பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவற்றுக்கான விண்ணப்பப்படிவங்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்களில் வழங்கப்படும். அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அங்கேயே அளிக்கலாம்.
எதற்கு எந்த விண்ணப்பம்? வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க படிவம் 6-ம், வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரின் பெயரைச் சேர்க்க படிவம் 6ஏ-ம், பெயரை நீக்க படிவம் 7-ம், பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள விவரங்களைத் திருத்த படிவம் 8-ம், பட்டியலில் பதிவு இடம் மாற்றம் செய்வதற்காக படிவம் 8ஏ-ம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு படிவம் 001-ஐயும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
இணையதள முகவரி: இணையதளம் வழியாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கலாம். இதற்கான இணையதள முகவரி www.elections.tn.gov.in/eregistraion
![]() |
| இடம்:கடற்கரை தெரு பள்ளி, படம்: யாசின் |
Advertisement




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது