வெளிநாடுகளில் பணி புரியும் இந்தியர்கள் விபத்து போன்ற நிகழ்வுகளில் இறப்பவர்களின் உடல்களை கொண்டு வர ஆன்லைனில் விண்ணப்பிக்க வெளியுறவுத்துறை இணையதளத்தில் புதிய பகுதியை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
வேலை மற்றும் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்வோர் அங்கு விபத்து உள்ளிட்ட காரணங்களால் மரணம் நிகழக்கூடிய நிலையில், அவர்களது உடல்களை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதில் ஏற்படும் இடையூறுகளைக் களைவதற்காக இணையதள பக்கம் இந்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.
எமிகிரேசன் செக் (இசிஆர்) தேவைப்படும் நாடுகளான மலேசியா, ஜோர்டான், ஐக்கிய அரபு நாடுகள், ஏமன், லெபனான், கத்தார், ஓமன், குவைத், ஈராக், பஹ்ரைன், சவூதி அரேபியா, ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியா, லிபியா, சூடான், சிரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு http://www.moia.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இறந்தவரின் உடல் சொந்த ஊருக்கு வந்து சேரும் வரையிலான நிகழ்வுகளை இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது