குடும்பத்தினர் துன்புறுத்தியதால் லவ் ஜிகாத் என பொய்யான புகார் அளித்ததாக இளம்பெண் வாக்குமூலம் !

0


உத்தரப்பிரதேசத்தில் நாளுக்கு நாள் பெண்கள் கற்பழிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருவதாக குற்றச்சாட்டு கிளம்பிய நிலையில் அங்கு பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் அம்மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் மதராசாவில் அடைத்து வைத்து கும்பல் ஒன்று தன்னை கற்பழித்ததாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். இப்புகார் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பள்ளியில் வேலை செய்து வரும் அப்பெண் தனது வீட்டிற்கு திரும்பும் வழியில் கும்பல் ஒன்று தன்னை கடத்தி, அங்குள்ள மதராசாவில் வைத்து கற்பழித்ததுடன், இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியதாக தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குடும்பத்தினர் துன்புறுத்தியதால் பொய்யான புகார் அளித்ததாக தற்போது அப்பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். தான் ஒரு இஸ்லாமிய இளைஞரை காதலித்தாகவும், அது பற்றி தெரிந்ததால், தனது பெற்றோர் தன்னை அடித்து துன்புறுத்தி இவ்வாறு புகார் அளிக்கவைத்ததாகவும் அப்பெண் போலீசில் கூறியுள்ளார்.

இத்தகவலை மீரட் நகர எஸ்.எஸ்.பி. ஓம்கார் சிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்லாமிய சமூகத்தின் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பும் நோக்கில் இப்புகார் அளிக்கப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது.





Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)