களையெடுத்தால் !

0


உடல் திண்ண ஓடியாடி அலையும்
ஓநாய் கூட்டங்கள்
மலக்கழிவுகள் என்றபோதும்
மாங்கு மாங்கென்று தின்றுதீர்க்கும்
மனிதப் பன்றிகள்

இரக்கம் இச்சைக்கு முன்
இரக்கமற்று கிடப்பதால்
ஈட்டிகளாய் மாறிடும்
ஈனப் பிறவிகள்

பச்சிளங்களைக்கூட
விட்டு வைக்காத
பாதகர்களின் கண்கள்
காமத்தால் மறைக்கப்படுவதால்
மேடையமைக்கும் கொடூரங்கள்

காணும் இடமெங்கிலும்
கவர்ச்சிகளின் அலங்கோலம்
கண்ணோரம் மோகமமர்வதால்
கண்ணியமெல்லாம் காததூரம்

கற்புகள் கலைக்கப்படுவது ஒருபுறம்
காணாமல்போகும் கற்புகள் மறுபுறம்
மானக்காப்பது மிக மிக கஷ்டம்
மானமிழப்பதோ மிக சர்வசாதாரணம்

நாளுக்கு நாள் சீரழிவுகளின்
நாட்டியமரங்கேற்றம்
நாய்களுக்கும் நரிகளுக்கும்
நாகரீக சிம்மாசனம்

காட்டேறிகள் வசிக்கும் பூமியில்
கற்புகள் சூரையாடப்படுவது மிகுதம்
கண்ணியம்
காக்கும் பொருப்பை பலப்படுத்தி
கலாச்சாரம் காப்பது சிறப்பாகும்

கற்பழிப்பவர்களை
தூண்டிவிடும் உணர்ச்சிகளை
துண்டித்து
காரணிகளை களையெடுத்தால்
கற்பழிப்பார்களா இனி?

இல்லையெனில்

கற்பை துச்சமென நினைக்கும்
துஷ்மன்களின் உயிர்களை
துகிலுரித்து துவேசித்தால்
கற்பழிக்க எண்ணுவோருக்கும்
கதிகலங்க வைக்காதோ மதி...

--------------------------------------

குறிப்பு:
இதுபோன்ற கொடூரங்களுக்கு தண்டணை கடுமையானால்தான்
தவறுகள் குறையவாவது நினைக்கும்..



ஆக்கம்: மலிக்கா



Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)