எதிர்வரும் 22ம் தேதி
நாடு முழுவதும் இந்து மத சகோதரர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தீபாவளி அன்று புத்தாடை அணிந்து, நல்ல உணவு பலகாரங்கள் செய்து உண்டு உறவினர்கள், மற்றும் மாற்று மத நண்பர்களுடன் பகிர்ந்து வீட்டில்
உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவரவர்களுக்கு ஏற்றவாறு பட்டாசுகளை வெடித்து
தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்துவர்.
அந்த வகையில் வரும்
தீபாவளிக்கு தேவையான வெடிகளை அதிரை பெரிய கடைத்தெரு, பேருந்து நிலையம் அருகில்,
ஈ.சி.ஆர் சாலை, பழஞ்செட்டித் தெரு போன்ற பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகளவில்
விற்ப்பனை செய்யப்படுகிறது. இந்த கடைகளில் சிறுவர்கள் வெடிக்கும் கம்பி மத்தாப்பு
முதல் ராக்கெட் வெடிகள் வரை அனைத்து விதமான பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதனை ஏராளமான
சிறுவர்கள், இந்து மத சகோதரர்கள் பலர் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
பட்டாசுகளை
பாதுகாப்புடன் கையாளவும்! சிறுவர்கள் பெரியவர்கள் துணையுடன் பட்டாசுகளை வெடிக்கவும்!
தீபாவளியை பாதுக்காப்பான தீபாவளியாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்க்கு அதிரை பிறை
சார்பாக அனைத்து இந்து மத சகோதரர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
Advertisement












1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது