கடந்த சில வருடங்களாகேவே செல்போன் நிறுவனங்கள் மீது பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். உபயோகிப்பவரின் செல்போனில் ஒரு நிமிடம் பேசியதாக காட்டும்போது செல்போன் நிறுவனம் 1 நிமிடம் 1 செகண்ட் பேசியதாக கூறி இரண்டு நிமிடத்திற்கான கட்டணத்தை வசூலிப்பதாக பொதுமக்கள் பலர் பரவலாக புகார் தெரிவித்துள்ள நிலையில், தற்போது டேட்டா கார்டிலும் செல்போன் நிறுவனங்கள் அதிக கட்டணத்தை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
செல்போன் நிறுவனங்களின் கட்டண உயர்வை கண்டித்து வரும் அக்டோபர் 31-ந் தேதி வாடிக்கையாளர்கள் அனைவரும் மொபைல் டேட்டா கனெக்சனை ஆப் செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரிமாறப்படும் தகவல்களை மக்கள் பார்வைக்கு வைக்கின்றோம்.
சமீபகாலமாக நாம் உபயோகிக்கும் மொபைல் நெட்வொர்க்கின் நெட் பேக் ஒரு காலத்தில் 1GB டேட்டாவை ரூ. 68 க்கு 30 நாட்களுக்கு வழங்கிய செல்போன் நிறுவனங்கள் பின்பு ரூ.80-க்கு விலையை உயர்த்தி 1 GB டேட்டாவை 900 MB ஆக குறைத்தது. அதன் பின் நாளுக்கு நாள் உயர்த்தப்பட்டு இன்று 1GB-2G 28 நாட்களுக்கு ரூ.128 ஆகவும், ரூ.128க்கு கிடைத்த 3G 30 நாள் நெட்பேக்கை 28 நாட்களாக குறைத்து அதையும் ரூ.198-க்கு உயர்த்தி வசூலிக்கின்றன செல்போன் நிறுவனங்கள். இதற்கு முக்கிய காரணம் இன்டர்நெட் நம்முடைய அன்றாட தேவையாக இருப்பது தான்.
இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறோம் ஆகவே ஸிம் கம்பெனி நெட் பேக் மூலமாக தனது வருமானத்தை பெருக்கிக்கொண்டது. இவர்களுக்கு தெரியும் நாம் ஒரு போதும் இதை எதிர்த்து குரல் எழுப்ப மாட்டோம் என்று. ஆனால் அது உண்மையல்ல நாம் இந்தியர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எதிர்ப்போம், வரும் அக்டோபர் 31 அன்று MOBILE DATA CONNECTION. DISABLE செய்து எதிர்ப்பை தெரிவிப்போம். அக்டோபர் 31-ந் தேதியன்று கர்நாடகம், ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஒரிஸா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் என அனைத்து மாநிலங்கலிலும் இந்தச் செய்தி மொழிபெயர்ப்புடன் அனுப்பபட்டுள்ளது.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது