தமிழக சட்டசபை செயலாளரான ஜமாலுதீன் கடந்த 2012ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவருக்கு மேலும் 5 ஆண்டுகாலம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் 2017ஆம் ஆண்டு வரை ஜமாலுதீன் அப்பதவியில் நீடிக்க் முடியும். இந்த நிலையில் திடீரென ஜமாலுதீன் இன்று சட்டசபை செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
"தமிழக முதல்வராக இருந்து 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற ஜெயலலிதா, எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதுடன் , அவர் இன்னும் 10 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது" என்று அண்மையில் தமிழக அரதழில் வெளியிடப்பட்டது.
இந்த அரசிதழ் வாசகங்கள் தொடர்பான முரண்பாட்டால் அவர் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
courtesy: oneindia.com
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது