ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பிலால் நகர் பகுதியில் சாலை வசதியில்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
சாலை வசதி இல்லாத காரணத்தால் வருடா வருடம் மழை காலங்களில் இப்பகுதியினர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நேற்றைய தினம் அதிரையில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக இப்பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளது.
சாலையில் தேங்கியுள்ள தண்ணீரினால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் இதனால் இப்பகுதியில் கொசுத் தொல்லையும் அதிகமாகியுள்ளது.
எனவே இப்பகுதி மக்களின் நலனில் கருத்தில் கொண்டு இப்பகுதிக்கு தரமான சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் அமைக்க சம்பந்தப்பட்டவர்கள் ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது