முத்துப்பேட்டை அருகே பைக்கில் சென்ற வாலிபரிடம் வழிபறி!

0

முத்துப்பேட்டை  அருகே  பைக்கில் சென்றவரிடம் பணம், செல்போனை  பறித்துச் சென்ற 2 பேரை போலீசார்  கைது செய்தனர். 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர் குளம் கரையங்காடு கிராமத்தைச் சேர்ந்த நடேசன் மகன் தங்கராசு (37). இவர் பல ஆண்டுகளாக கோவையில் வேலை பார்த்து வருகிறார்.

சில  தினங்களுக்கு முன் விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு முத்துப்பேட்டைக்கு பைக்கில் சென்று விட்டு வீடு திரும்பியபோது அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பரணிகுமார்(26) என்பவர் தங்கராசுவை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றார்.

இதுகுறித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் தங்கராசு புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர்  வெர்ஜினியா வழக்கு பதிவு செய்து பரணிகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)