அதிரையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி!(படங்கள் இணைப்பு)

0

தமிழகம் முழுவதும் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வாரம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இதனையடுத்து இன்று மாலை அதிராம்பட்டினம் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மாணவிகளால் நடத்தப்பட்டது .

இந்த பேரணி அதிராம்பட்டினம் காவல்துறை உதவி ஆய்வாளர்  B.பசுபதி அவர்களின் முன்னிலையில் காவல் நிலையத்தில் இருந்து துவங்கியது.மேலும் இந்த பேரணியில் மது குடித்து விட்டு வாகனம் ஒட்டாதீர்,படியில் பயணம் நொடியில் மரணம்,இரு சக்கர வாகனம் இருவருக்கே என்ற முழக்கத்துடன் மாணவிகள் சென்றனர்.

இந்த பேரணியில் அதிராம்பட்டினம் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தர், ஜீவானந்தம் ,தலைமை காவலர் விஜய் ஆனந்த் மற்றும் அரசு பெண்கள் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.    







Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)