தஞ்சை மாவட்டத்தில் குடிநீர் ஆதாரங்களை ஆய்வு செய்து தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, குடிநீர் வடிகால் வாரியத்திற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் வரும் 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள குடிநீர் திட்டங்கள், ஆழ்குழாய் கிணறுகள் உள்ளிட்ட அனைத்து குடிநீர் ஆதாரங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, குடிநீரின் தரம் மற்றும் பாதுகாப்பை குடிநீர் வடிகால் வாரியம் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது