அதிரைக்கு மீண்டும் வருகிறான் அவன்!!!

Editorial
0

யார் அவன்..? எதற்க்காக அவன் இங்கு வருகிறான்..? மக்களுக்கு அவன் வருவதில் விருப்பமா..? இல்லை. ஏன்..? ஏனென்றால் அவன் கடந்த பல ஆண்டுகளாக மக்களை பெரும் துயரத்திற்க்கு ஆளாக்கியவன்..சில நாட்களாக அடங்கியிருந்தான் மீண்டும் துளிர்விட துவங்கியுள்ளன்....யார் என்று உங்களுக்கு இன்னும் புரியவில்லையா..?மேலும் சில குறிப்புகள் தருகிறொம் கண்டுபிடிக்க முயற்ச்சியுங்கள்...அவன் பலரின் பல வித தொழில்களையும் கெடுத்தான்...வீட்டில் சமையல் செய்யும் பெண்களையும் அவன் விட்டு வைக்கவில்லை.குழந்தைகளையும்,நோயாளிகளையும் அவன் நிம்மதியாக தூங்கக்கூட விடவில்லை. பள்ளி கல்லூரி மாணவர்களையும் படாத பாடு படுத்தியவன்...அவர்களால் இவனால் நிம்மதியாக தேர்வுகளுக்கு படிக்க முடியவில்லை...ஏன் அவனால் தமிழகத்தில் ஆட்சி கூட ஒரு முறை மாறியது...இன்னும் புரியவில்லையா..! அவன் தான் வியர்வையின் நண்பன்,நமக்கெல்லாம் மிகவும் பரிட்சையமானவன்...ஆம் அவன் தான் உங்களை மிகவும் வாட்டி பல நாட்கள் உங்களின் தூக்கத்தை கெடுத்த "மிண் வெட்டு". ஆம் அதிரையில் மீண்டும் அவன் வர துவங்கியுள்ளான். கடந்த சில நாட்களாக பல முறை மின் சாரம் தடைப்பட்டுள்ளது. இதனால் நேற்று மக்கள் பெரிதும் துயரடைந்தனர். மேலும் பழைய நிலைமை மீண்டும் வந்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர்.

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)