வாக்காளர் பட்டியலில், ஆதார் அடையாள அட்டை எண், மொபைல்ஃபோன் எண் மற்றும் இ மெயில் முகவரி யை இணைக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து, கலெக்டர் சுப்பையன் வெளியிட்ட அறிக்கையில் இந்திய தேர்தல் ஆணையம் தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை முறைப்படுத்தி, விபரங்களை உறுதிபடுத்தும் திட்டத்தை கடந்த, 3ம் தேதி முதல் நாடு முழுவதும் துவக்கியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள், தங்களுடைய ஆதார் அடையாள அட்டை எண், மொபைல் ஃபோன் எண் மற்றும் இமெயில் முகவரி ஆகியவற்றை கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
தஞ்சை மாவட்டத்தில், ஆதார் அடையாள அட்டை விடுபட்டோர் பட்டியலில் ஏழு லட்சத்து, 86 ஆயிரத்து, 89 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் ஆதார் அடையாள அட்டைக்கான ஃபோட்டோ மற்றும் கைரேகை பதிவு செய்யும் பணி நடக்கிறது. இதுவரை, 43 ஆயிரத்து, 132 பேர் பதிவு செய்துள்ளனர்.
மேலும், வாக்காளர்கள், தீதீதீ.ணதிண்ணீ.டிண என்ற இணையதள முகவரியிலும் தங்களுடைய ஆதார் அடையாள அட்டை எண், மொபைல் ஃபோன் எண் மற்றும் இமெயில் முகவரியை பதிவு செய்து கொள்ளலாம் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது