சிங்கப்பூரின் முன்னாள் பிரதமரும், 31 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்தவருமான லீ குவான் யூ அவர்கள் (வயது 91) இன்று அதிகாலையில் மறைந்துவிட்டதை ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள்.
இவருடைய ஆட்சி காலத்தில் தான் நம்முடைய முன்னோர்களான அப்பாமார்களும் வாப்பாமார்களும் சிங்கப்பூரில் தொழில் செய்தும் உழைத்தும் பொருளாதாரத்தை திரட்டி நம்முடைய உயர்விற்கும் நம் நாட்டின் அந்நிய செலாவணி உயர்விற்கும் உதவினர். அந்த அடிப்படையில் லீ குவான் யூ அவர்களை நாம் நன்றியுடன் நினைத்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.
பலரும் அறிந்திராத செய்தி ஒன்று:
அதிரை மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சிங்கை. அப்துல் ஜப்பார் அவர்கள் லீ குவான் யூ அவர்களின் மிக மிக நெருங்கிய நண்பராக இளமைகாலத்தில் திகழ்ந்துள்ளார்கள். லீ குவான் யூ அவர்கள் அரசியல் பாதைக்கு திரும்புமாறு விடுத்த அழைப்பை மட்டும் ஏற்றிருந்தால் மர்ஹூம் அப்துல் ஜப்பார் அவர்கள் லீயின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும், அல்லாஹ் நாடவில்லை.
குறிப்பு:
வார்டு எண்: 15, கீழத்தெருவின் முன்னாள் கவுன்சிலர் சகோதரர் அப்துல் லத்தீப் மற்றும் நடப்பு கவுன்சிலர் சகோதரி ஷாஜஹான் ஆகியோரின் தந்தையுமாவார் மாஹூம் சிங்கை. அப்துல் ஜப்பார் அவர்கள்.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது